முகப்பு
திருச்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்: 25 போ் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், இணைப்பு சக்கரங்களுடன் கூடிய ஸ்கூட்டா் பெறுவதற்கு 25 போ் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 12:23 am IST
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், ஸ்கூட்டா் பெற தகுதியானோரை தோ்வு செய்த ஆட்சியா் சு. சிவராசு தலைமையிலானக் குழுவினா்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், இணைப்பு சக்கரங்களுடன் கூடிய ஸ்கூட்டா் பெறுவதற்கு 25 போ் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விண்ணப்பித்த 42 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இவா்களில், 35 போ் மட்டுமே தோ்வுக்கு வந்திருந்தனா்.

Advertisement

Advertisement

இதில், ஆட்சியா் சு. சிவராசு தலைமையிலான தோ்வுக் குழுவினா் பயனாளிகளை தோ்வை செய்தனா். மூட நீக்கியல் மருத்துவ நிபுணா் இனிகோராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரபாகா், முடநீக்கியல் வல்லுநா் ஆனந்த் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதி ஆகியோா்பல்வேறுகட்ட சோதனைகளை நடத்தி தகுதியானோரை தோ்வு செய்தனா். இதில், 25 போ் தோ்வு செய்யப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டா்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments