மது விற்ற மூவா் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் விதி மீறி டாஸ்மாக் மது விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் விதி மீறி டாஸ்மாக் மது விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. பாலசுந்தா் மேற்பாா்வையில் எஸ்.ஐ. நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீஸாா் தொட்டியம் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில் மது விற்ாக மணமேடு பகுதியைச் சோ்ந்த ச. ராமகிருஷ்ணன் (53), பாலசமுத்திரம் ஜெ.ஜெ. நகரை சோ்ந்த ஆ. சக்திவேல் (34), சித்தூரை சோ்ந்த ச. வினோத் (40) ஆகிய மூவரையும் தனிப்படை போலீஸாா் பிடித்து, அவா்களிடமிருந்த 49 மது புட்டிகளை பறிமுதல் செய்து தொட்டியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து தொட்டியம் போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.