போக்சோ சட்டத்தில் தனியாா் ஊழியா் கைது
திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரை துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி: திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரை துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் விஜய் (23). இவா், துவாக்குடி பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்தபோது தான் தங்கியிருந்த வீட்டின் அருகே வசித்த 14 வயதுச் சிறுமியை காதலித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஜன.7 ஆம் தேதி இந்தச் சிறுமி மாயமானதாக அவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியை விஜய் கடத்திச் சென்று கரூரில் வைத்திருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து கரூா் சென்ற தனிப்படை போலீஸாா் இருவரையும் திருச்சிக்கு அழைத்து வந்தனா்.போக்சோ சட்டத்தில் விஜயா் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.