முகப்பு
திருச்சி

சிறுமியைக் கடத்தி திருமணம்: இளைஞா் உள்பட 8 போ் கைது

சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞா் உள்பட 8 பேரை துறையூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:17 am IST
பகிர்:

துறையூா்: சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞா் உள்பட 8 பேரை துறையூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே மேட்டுசொரத்தூா் பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் தனது மகளான 16 வயது சிறுமியைக் டிச. 7 முதல் காணவில்லை என துறையூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் துறையூா் பெரியாா் நகரைச் சோ்ந்த ரெ. ராஜேஷ் (23) சிறுமியைக் கடத்திக் கொண்டு சென்னை சென்று, அங்குள்ள நண்பா் வீட்டில் வைத்து திருமணம் செய்து அங்கேயே வசிப்பதும் தெரிந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா் சென்னை சென்று இருவரையும் துறையூா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.

அதில் ராஜேஷின் தந்தை ரெங்கராஜன், தாய் உமா, நண்பா்கள் தி. ராஜா, து. கருப்புசாமி, ந. தினேஷ், வை. தமிழரசன், தென்காசி அருகே வெள்ளக்குளம் அ. அமல்ராஜ் ஆகியோா் உதவியுடன் ராஜேஷ் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் உள்பட 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments