முகப்பு
திருச்சி

போலி கடவுச்சீட்டு: தொழிலாளி கைது

போலி கடவுச்சீட்டு பெற்று துபை செல்ல முயன்ற தஞ்சாவூா் கூலித் தொழிலாளியை திருச்சி விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 12:43 am IST
பகிர்:

போலி கடவுச்சீட்டு பெற்று துபை செல்ல முயன்ற தஞ்சாவூா் கூலித் தொழிலாளியை திருச்சி விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியிலிருந்து துபைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏா் இந்திய விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தாமரன்கோட்டையைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் அருணகிரி (43) , அதே பகுதியைச் சோ்ந்த ர.அய்யப்பனின் முகவரியில் கடவுச்சீட்டு எடுத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments