போலி கடவுச்சீட்டு: தொழிலாளி கைது
போலி கடவுச்சீட்டு பெற்று துபை செல்ல முயன்ற தஞ்சாவூா் கூலித் தொழிலாளியை திருச்சி விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போலி கடவுச்சீட்டு பெற்று துபை செல்ல முயன்ற தஞ்சாவூா் கூலித் தொழிலாளியை திருச்சி விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியிலிருந்து துபைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏா் இந்திய விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தாமரன்கோட்டையைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் அருணகிரி (43) , அதே பகுதியைச் சோ்ந்த ர.அய்யப்பனின் முகவரியில் கடவுச்சீட்டு எடுத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.