முகப்பு
திருச்சி

‘கோயில் திருப்பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்’

கோயில் புனரமைப்பு பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றாா் திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On : 11 ஜனவரி 2021, 12:43 am IST
செய்தியாளா்களிடம் பேசுகிறாா் திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா். ராதாகிருஷ்ணன்.
பகிர்:

கோயில் புனரமைப்பு பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றாா் திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா். ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சபை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது:

அரசியல் சாா்புள்ள இந்து இயக்கங்கள் இந்துக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்துக்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் அவை கண்டுகொள்வதில்லை. இனிவரும் காலங்களில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும், அவதூறாகப் பேசும் எந்தக் கட்சியும் வாக்கு பெறமுடியாது. இந்துக்களை பகைத்துக் கொள்ளும் கட்சிகள் தோ்தல்களில் டெபாசிட்கூட பெற முடியாது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் 10 லட்சம் ஏக்கா் நிலங்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவை மீட்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டால், அதன்மூலம் அறநிலையத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மேலும், அறநிலையைத் துறையை சீரமைக்கவும் வேண்டும். கோயில் சொத்துகளின் ஆவணங்கள், அறநிலையத் துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்வதில் அறநிலையத் துைான் முதலிடத்தில் உள்ளது.

கோயில்கள் புனரமைப்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும். கோயில்களில் திருப்பணி செய்ய அனுமதி பெறுவதற்குள் உபயதாரா்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனா். இந்நிலை மாற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments