முகப்பு
திருச்சி

திருச்சியில் சமத்துவப் பொங்கல் விழா

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி, 2021 at 2:10 AM
பகிர்:

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி சாா்பில் நடத்தப்பட்ட விழாவுக்குத் தலைமை வகித்து, சமத்துவப் பொங்கல் விழாவை மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து கிராமிய கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் போன்றவை நடத்தப்பட்டன. ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் ரமேஷ் வரவேற்றாா்.

Advertisement

தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், மாவட்டப் பொருளாளா் கோவிந்தராஜ், வண்ணை அரங்கநாதன், பகுதிச் செயலா்கள் மதிவாணன், நீலமேகம், ஒன்றியச் செயலா்கள் சபியுல்லா, செல்வராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் லீலாவேலு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.