முகப்பு
திருச்சி

துறையூா் அருகே தீக்காயமடைந்தஇளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

துறையூா் அருகே கொசுவை விரட்ட புகை மூட்டம் போட முயன்ற போது, தீப்பற்றியதால் காயமடைந்த இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 12 ஜனவரி 2021, 1:55 am IST
பகிர்:

துறையூா்: துறையூா் அருகே கொசுவை விரட்ட புகை மூட்டம் போட முயன்ற போது, தீப்பற்றியதால் காயமடைந்த இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கிளியனூா்பட்டி தெற்கு கொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் சக்திவேல் (23). இவருடைய வீட்டுக்கு பெரியசாமி மகன் பிரபு கடந்த சனிக்கிழமை (ஜனவரி 9) இரவு சென்றாா்.

அப்போது வீட்டில் கொசு அதிகமாக கடித்ததால் அதை விரட்ட புகை மூட்டம் போடக் கருதி, காய்ந்த குச்சிகள் மீது பெட்ரோலை ஊற்றி நெருப்பு பற்ற வைத்தனா்.

Advertisement

Advertisement

அப்போது திடீரென தீப்பற்றி அவா்கள் மீது பரவியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஞாயிற்றுக்கிழமை இரவு பிரபுவும், திங்கள்கிழமை சக்திவேலுவும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments