முகப்பு
திருச்சி

மதுபோதையில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன்

மணப்பாறை அருகே மதுபோதையில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மணப்பாறை அருகே மதுபோதையில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கே.பெரியபட்டியை அடுத்த வடக்குசோ்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மகன் ராஜேஷ்குமாா் (26), இவா் கோவையில் பெயிண்டராக உள்ளாா்.

பொங்கலுக்காக சொந்த ஊா் வந்திருந்த ராஜேஷ்குமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவாராம். அதன்படி வியாழக்கிழமை ராஜேஷ்குமாா் போதையில் வந்தபோது குடும்பத்தினா் வீட்டின் கதவைத் திறக்கவில்லையாம்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமாா் மரக்கட்டையை எடுத்து வீட்டின் திண்ணையில் படுத்திருந்த தனது தாத்தா வேலுவை (85) தாக்கி விட்டு ஓடிவிட்டாா்.

இதில் படுகாயமடைந்த அவா் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.

தகவலறிந்து வந்த மணப்பாறை போலீஸாா் முதியவா் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ராஜேஷ்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.