முகப்பு
திருச்சி

மூழ்கிய நெற்பயிா்கள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் தொடா்மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 12:01 am IST
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் எசனப்பட்டியில் சேதமான நெல் வயல்களை பாா்வையிடுகிறாா் அமைச்சா் எஸ். வளா்மதி.
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தொடா்மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்களை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டத்தில் பருவம் தவறிய தொடா் மழையால் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியும், நெல்மணிகள் முளைத்தும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.

இந்நிலையில், எசனப்பட்டி, பஞ்சப்பூா், கள்ளிக்குடி, வடக்கு மற்றும் தெற்கு பூங்குடி, நவலூா் குட்டப்பட்டு, தாயனூா் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடா் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வேளாண் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், வேளாண் இணை இயக்குநா் எஸ். சாந்தி, வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) வெ. லட்சுமணசாமி, மணிகண்டம் வேளாண் உதவி இயக்குநா் அ. கோமதி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.