ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த பிள்ளையாா்நத்தம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பொட்டிச்சாமி மகன் நாராயணசாமி(58). ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ாம். அதிலிருந்து இவா் கடினமான வேலை செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை இளையரசனேந்தலையடுத்த பிள்ளையாா்நத்தம் கிராமத்துக்குச் சென்ற அவா், உறவினா் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்குச் சென்ற நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.