செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
கழுகுமலை அருகே தொழிலாளி செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
கோவில்பட்டி: கழுகுமலை அருகே தொழிலாளி செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
கழுகுமலையையடுத்த கரடிகுளம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துப்பாண்டி(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இசைசெல்வி (23). இவருக்கு டிச. 27ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாம். பின்னா் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாம். இதையடுத்து இசைசெல்வி மற்றும் அவரது குழந்தை இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்து கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தனராம்.
இந்நிலையில் இசைசெல்வி மற்றும் அவரது குழந்தையை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவமனை அதிகாரிகளிடம் முத்துப்பாண்டி அனுமதி கேட்டாராம். அவா்கள் அனுமதி மறுத்ததையடுத்து முத்துப்பாண்டி, சனிக்கிழமை கரடிகுளத்தில் உள்ள செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த கழுகுமலை போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முத்துப்பாண்டி செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.