முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் 1,903 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் 1,903 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 1:31 am IST
பகிர்:

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் 1,903 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டி கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் முனியசாமி, கோட்டாட்சியா் விஜயா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கினாா். 12 பள்ளிகளின் 1903 மாணவா்களுக்கு

Advertisement

Advertisement

சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில், வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சசிகுமாா், பள்ளித் தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments