கோவில்பட்டி அருகே விபத்தில் இளைஞா் பலி
கோவில்பட்டி அருகே பைக் மரத்தில் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே பைக் மரத்தில் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி பாரதி நகா் 4ஆவது மேட்டுத் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் அரவிந்த் (24). இவா் பைக்கில் முடுக்குமீண்டான்பட்டி - துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பைக் மோதியதாம். இதில் அரவிந்த் பலத்த காயமடைந்தாா்.
காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.