முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் சமத்துவப் பொங்கல்

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 14 ஜனவரி 2021, 1:06 am IST
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கிவைக்கிறாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.
பகிர்:

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராஜாராம் முன்னிலை வகித்தாா்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு விழாவை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

இதில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சிப் பொறியாளா் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், பேராசிரியா் மற்றும் தலைவா் பாஸ்கா், கயத்தாறு காவல் நிலையம், கம்மாபட்டி, ஓலைகுளம், செட்டிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா் ஆகியோா் விழாவை தொடங்கிவைத்தனா்.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். இதில், கல்லூரி முதல்வா் (பொ) சாந்தி மகேஸ்வரி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments