திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருப்பாவை பாராயணம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மாலையில் ஊஞ்சல் மகா உற்சவம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.