முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 1:08 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

மும்பை தாக்குதலுக்குப் பின்னா் கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் அவ்வப்போது கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சீ விஜில் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை மாலை 6 மணி வரை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சைரஸ், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸாா் கடல்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில், பழைய துறைமுகத்தில் இருந்து கிழக்கே 2 கடல்மைல் தொலைவில் படகில் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 12 பேரை கடலோர போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதேபோல், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments