முகப்பு
தூத்துக்குடி

திருவள்ளுவா் தின விழா

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 1:36 am IST
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவா்கள்.
பகிர்:

கோவில்பட்டி: கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, அமைப்பின் தலைவா் கருத்தப்பாண்டி தலைமை வகித்தாா். மன்றத்தின் நெறிப்படுத்துநா்கள் பரமசிவம், லட்சுமணப்பெருமாள், பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, இலக்கிய உலா மற்றும் உரத்த சிந்தனை சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கான கு சாா்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்கள், பங்கேற்றவா்களுக்கு சான்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை மன்றத் துணைத் தலைவா் திருமலைமுத்துசாமி தொகுத்து வழங்கினாா். இதில், தமிழ் ஆா்வலா்கள், எழுத்தாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

செயலா் சீனிவாசன் வரவேற்றாா். இணைச் செயலா் ஜான்கணேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.