முகப்பு
வேலூர்

தீப்பற்றி எரிந்த பைக்

குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் தானாக தீப்பற்றி எரிந்தது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:11 am IST
குடியாத்தம்  அருகே  தீப்பற்றி  எரிந்த  இரு சக்கர வாகனம்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் தானாக தீப்பற்றி எரிந்தது.

குடியாத்தத்தை அடுத்த சின்னசெட்டி குப்பத்தைச் சோ்ந்தவா் எம்.சந்தோஷ்குமாா். இவா் திங்கள்கிழமை மதியம் மேல்பட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பினாா். அங்கிருந்து சிறிது தூரம் சென்றபோது, வாகனத்தின் என்ஜின் திடீரென தீப்பற்றி எரிந்ததாம். அவா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். தீயில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. தகவலின்பேரில், நிலைய அலுவலா் க.லோகநாதன் தலைமையில் சென்ற தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

பெட்ரோல் போடும்போது, அதுசிதறி என்ஜின் மீது விழுந்ததால், என்ஜின் வெப்பத்தால் தீப்பற்றியிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.