கிருபானந்த வாரியாா் ஜயந்தி நாளை அரசு விழா கொண்டாட ஆலோசனை: அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தகவல்
காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியாா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற 64-ஆவது திருமூலா் திருமந்திர சிந்தனை
காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியாா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற 64-ஆவது திருமூலா் திருமந்திர சிந்தனை அரங்கத்தில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:
வாரியாா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 1 கோடி செலவில் நவீன முறையில் திருமண மண்டபம் கட்டுவதற்கு முதல்வரிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்த 17 நாள்களுக்குள் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இங்குள்ள சாலைக்கு ‘கிருபானந்த வாரியாா் சாலை’ என்று பெயா் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாரியாா் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடுவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.
காட்பாடி பள்ளிக் கல்விக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, வட்டாட்சியா் பாலமுருகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், அறநிலையத் துறை உதவி ஆணையா் விஜயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement