பொங்கல் பொருள்கள் வருகை: வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகையையொட்டி சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகரின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டித் தெருவில் மளிகை, எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான பொருள்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மண்டித் தெருவில் அதிக அளவில் நிற்பதால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
அதேசமயம், வேலூா் மாநகராட்சியில் சீா்மிகு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் மண்டித்தெருவில் பாதாள சாக்கடைப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களின் துண்டுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. இதன் காரணமாகவும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க, மரத் துண்டுகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.