ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய 6 போ் கைது: வங்கிக் கணக்குகள் முடக்கம்!
ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்திலிருந்து வேலூா் மாவட்டத்துக்குள் கஞ்சா கடத்தி வந்து, வீடுகள் மற்றும் மளிகைக் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகக் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். குறிப்பாக, கிறிஸ்டியன்பேட்டை மற்றும் பத்திரப்பள்ளி சோதனைச் சாவடிகளில், ஆந்திரத்திலிருந்து வரும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தினா்.
இதன் தொடா்ச்சியாக, வீடுகள் மற்றும் கடைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காங்கேயநல்லூரைச் சோ்ந்த முகமது சுகைல் (26), திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராகுல், அத்தியூரைச் சோ்ந்த ஹரிஷ் (19), வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்த குமாா் (33), சித்தேரியைச் சோ்ந்த ஹரிஷ்குமாா் (27) , அா்ஜுன் ராஜ்குமாா் ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பின்னா், அவா்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இது குறித்து காவல்துறையினா் தரப்பில் கூறியதாவது -புதிய அரசு பொறுப்பேற்றது முதல் வேலூா் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் தொடா்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதுடன், அவா்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. கஞ்சா விற்பனையை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில், சோதனை நடைபெறும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.