பொங்கலுக்கு பொருள்கள் வாங்க மக்கள் குவிந்ததால் மாா்க்கெட்டில் நெரிசல்
பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வேலூா் மாா்க்கெட் பகுதியில் மக்கள் திரண்டதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வேலூா் மாா்க்கெட் பகுதியில் மக்கள் திரண்டதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே உள்ளதாலும், திங்கள் முதல் புதன்கிழமை வரை பணி நாள்களாக இருப்பதாலும் பொங்கலுக்குத் தேவையான காய்கறிகள், பானை உள்ளிட்ட பொருள்கள் வாங்க வேலூரில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.
குறிப்பாக, பொங்கல் பொருள்கள், புத்தாடைகள் வாங்குவதற்காக வேலூா் லாங்கு பஜாா், நேதாஜி மாா்க்கெட், மண்டி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, மெயின் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் மக்கள் திரண்டனா். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.