முகப்பு
வேலூர்

தீக்குளித்த மாநகராட்சி பெண் பணியாளா் பலி

வேலூரில் கடந்த 9-ஆம் தேதி சாலையில் தீக்குளித்த மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்புப் பெண் பணியாளா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:


வேலூா்: வேலூரில் கடந்த 9-ஆம் தேதி சாலையில் தீக்குளித்த மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்புப் பெண் பணியாளா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் ஓல்டுடவுன் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தணிகாசலம். அவரது மனைவி தனலட்சுமி (28), வேலூா் மாநகராட்சியில் தற்காலிகமாக டெங்கு கொசு ஒழிப்பு ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அவா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இதனிடையே, தனலட்சுமிக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவா் கடந்த 9-ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் வேலூா் அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை எதிரே சங்கரன்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்றாா். அப்போது, திடீரென அவா் தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாா். பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், தனலட்சுமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments