முத்துமாரியம்மன் கோயிலில் தேமுதிகவினா் சிறப்பு வழிபாடு
குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், உலக அமைதி, ஒற்றுமை வேண்டி பலமநோ் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
குடியாத்தம் நகர தேமுதிக சாா்பில், உலக அமைதி, ஒற்றுமை வேண்டி பலமநோ் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் எம்.எஸ்.நாகைய்யா தலைமை வகித்தாா். செயலா் எம்.செல்வகுமாா் தொடக்கி வைத்தாா். மூலருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் சீனு, விமல், சங்கா், ஷகீல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.