கல்லூரி மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்
திருநாவலூரில், நீக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் பொறியியல் கல்லூரியில் சேர்க்க வலியுறுத்தி, மாணவர்கள்
திருநாவலூரில், நீக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் பொறியியல் கல்லூரியில் சேர்க்க வலியுறுத்தி, மாணவர்கள் புதன்கிழமை கல்லூரி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு
பட்டனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூரில் உள்ள அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கும் ஒரு வாரத்துக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கல்லூரி நிர்வாகம் சில மாணவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. மேலும்,ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட இரு மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கியது.
Advertisement
இதனால் மனமுடைந்த மாணவர் ஆர்.பாஸ்கரன், கல்லூரி முன், ஆசிரியர்கள் முன்னிலையில் விஷம் குடித்துள்ளார். பண்ருட்டி மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்கக்கோரியும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கல்லூரியின் முன் மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.