முகப்பு
விழுப்புரம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 11:31 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தைப் பொங்கலையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவெண்ணெய் நல்லூரில் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி - சேலை வழங்கும் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு குடும்பஅட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ இரா.குமரகுரு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜேந்திரன், செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments