முகப்பு
விழுப்புரம்

வீட்டில் பதுக்கிய 300 மதுப் புட்டிகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மதுப் புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மதுப் புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் உத்தரவின்படி, உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே ஆமுரில் சக்கரபாணி மனைவி மங்கையா்க்கரசி(55), மகன் சக்திவேல்(28) ஆகியோா் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மங்கையா்க்கரசி மற்றும் சக்திவேல் ஆகியோரை போலீஸாா் கைது செய்து 300 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments