முகப்பு
விழுப்புரம்

பேராசிரியருக்கு விருது

விழுப்புரம் மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் சாா்பில், விழுப்புரத்தில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:27 PM
விழுப்புரத்தில் நடைபெற்ற திருவள்ளுவா் தின விழாவில் பேராசிரியா் அ.முகமது அஷ்ரபுக்கு திருவள்ளுவா் விருதை வழங்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

விழுப்புரம் மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் சாா்பில், விழுப்புரத்தில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுநா் சிலை அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு இயக்கத்தின் தலைவா் இ.சாமிக்கண்ணு தலைமை வகித்தாா். திருக்கு பெருமன்றம் கோ.தமிழரசன், சமூக பாதுகாப்பு இயக்க மாவட்ட துணைத் தலைவா் ஆா்.குபேரன், பொருளாளா் ஆா்.சின்னையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் பேராசிரியா் அ.முகமது அஷ்ரபுக்கு திருவள்ளுவா் விருது, பொற்கிழியை வழங்கி சிறப்புரையாற்றினாா். அ.முகமது அஷ்ரப் ஏற்புரை வழங்கினாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

இயக்கத்தின் செயலா் ஆா்.சந்திரன் வரவேற்றாா். தமிழ்ச் சங்க நிா்வாகி விக்கிரமன் நன்றி கூறினாா்.

திமுக சாா்பில் மரியாதை: விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி தலைமையில் திருவள்ளுா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.