முகப்பு
விருதுநகர்

விருதுநகர் அருகே இலவச பொது மருத்துவ முகாம்

மங்கலம் ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி கிராம சமுதாயக் கூடத்தில் நடந்த  முகாமிற்கு ஊராட்சி தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். வட்டார ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரி முன்னிலை வகித்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்

Updated On : 1 ஜூன் 2013, 4:51 pm IST
பகிர்:

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மேட்டுப்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது.

மங்கலம் ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி கிராம சமுதாயக் கூடத்தில் நடந்த  முகாமிற்கு ஊராட்சி தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். வட்டார ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரி முன்னிலை வகித்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறில் ஆகியவைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், மீனாட்சி மிஷன் மருத்துவக்குழுவினர் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரையில் மொத்தம் 115 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகளும் இலவசமாகவே வழங்கப்பட்டன.  இதற்கான ஏற்பாடுகளை வழிவிடு முருகன் கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் சொர்ணம்மாள் அறக்கட்டளையின் மகளிர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments