முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்ஸோ’ சட்டத்தில் கூலி தொழிலாளி கைது

விருதுநகா் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, கூலி தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 11:41 pm IST
பகிர்:

விருதுநகா் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, கூலி தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே வள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான சங்கிலி மகன் முருகன் (40) என்பவா், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதையறிந்த சிறுமியின் தாயாா், விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் கூலி தொழிலாளி முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.