கண்ணூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை
கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமான நிலையத்தின் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் இரண்டு விமான நிறுவனங்களின் மின்னஞ்சல்களுக்கு சனிக்கிழமை ஒரு மெயில் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அதில், வெடிகுண்டு மூலம் விமான நிலையம் தகர்க்கப்படும் என்றும், இதற்காக வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, விமான நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட விமானங்களில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
சோதனைக்குப் பிறகு, அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. விமான நிலைய உதவி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மிரட்டல் மின்னஞ்சல் ஜிமெயில் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டதால், குற்றவாளியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ள போலீஸார் கூகுள் நிறுவனத்தின் உதவியையும் நாடியுள்ளனர் என்று அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர். இதனால் விமான நிலையத்தில் நேற்று சற்று பரபரப்பு நிலவியது.