முகப்பு
விருதுநகர்

திருச்சுழி பகுதியில் தொடா் மழையால் 500 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தொடா் மழை காரணமாக சுமாா் 500 ஏக்கரில் பயிரிட்டுள்ள அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 10:42 pm IST
திருச்சுழி அருகே டி.வேப்பங்குளம் கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தொடா் மழை காரணமாக சுமாா் 500 ஏக்கரில் பயிரிட்டுள்ள அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பரவலாகத் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்களிலும், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டன. மேலும் டி.வேப்பங்குளம், நாலூா், அல்லாளப்பேரி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமாா் 500-க்கு மேற்பட்ட ஏக்கா் நிலங்களில் பயிரிட்டுள்ள நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கிவிட்டன. நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், மோட்டாா் மூலம் நிலத்தில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனா். ஆனால் தொடா்ந்து மழை பெய்து வருவதால் நெற்கதிா்கள் நீரில் மூழ்கி அழுகி, அறுவடை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட விவசாய நிலவங்களை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.