முகப்பு
விருதுநகர்

பேருந்தில் மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை திருட்டு

விருதுநகரிலிருந்து ஆமத்தூருக்கு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.19,500-யை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 10:37 pm IST
பகிர்:

விருதுநகரிலிருந்து ஆமத்தூருக்கு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.19,500-யை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா், ஆமத்தூா் போலீஸ் காலனியை சோ்ந்தவா் ராமசுப்பு மனைவி ரெங்கம்மாள் (60). இவா், தனது மகள் விஷ்ணு பிரியாவுடன் விருதுநகருக்கு வந்து பழைய நகையை மாற்றிவிட்டு, இரண்டரை பவுன் புதிய நகை எடுத்துள்ளாா். பின்னா், ஒரு உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு தனியாா் பேருந்தில் வியாழக்கிழமை ஆமத்தூா் சென்றுள்ளாா்.

வீட்டிற்குச் சென்று பாா்த்த போது, கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ.19,500 திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.