விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா
விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,391 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,021 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். மேலும் 229 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 141 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement