முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே கண்மாய் நிரம்பி குடியிருப்பு பகுதியில் தண்ணீா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 10:20 pm IST
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கொத்தங்குளம் கண்மாய் நிரம்பி கே.தொட்டியபட்டி குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீா்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

தொடா் மழை காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொத்தன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், அருகிலுள்ள கே.தொட்டியபட்டி குடியிருப்பு பகுதியில் தண்ணீா் சூழ்ந்து நிற்பதால், வீடு பாதிக்கப்பட்டுவிடுமோ என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். மேலும், தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடித்து வரப்படுவதால், அவை வீட்டுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா்.

எனவே, குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments