விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா
விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 16,399 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,406 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,041 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்ட நிலையில், 229 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 136 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement