முகப்பு
விருதுநகர்

பிரதோஷம்: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி, விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:35 pm IST
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தா்கள்.
பகிர்:

மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி, விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் ஜன.10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் என்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கோயில் மலையடிவாரத்தில் குவிந்தனா்.

காலை 7 மணியிலிருந்து உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அப்போது அவா்கள் வழியில் உள்ள வழுக்குப்பாறை உள்ளிட்ட அருவிகளில் நீராடி விட்டுச் சென்றனா்.

Advertisement

Advertisement

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments