முகப்பு
விருதுநகர்

‘சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் தொடக்கம்’

சிவகாசி- சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக பால் வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:36 pm IST
மாரனேரி ஈஸ்வரன் காலனி பகுதியில் பொதுமக்களிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை மனுக்களைப் பெற்ற அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி
பகிர்:

சிவகாசி- சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக பால் வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம், மாரநேரி, கோப்பைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக் கொண்ட அவா், பின்னா் பொதுமக்களிடம் கூறியது: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வழியில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனா்.

திருத்தங்கலில் அரசு மருத்துவமனை, சிவகாசியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன. சிவகாசி- சாட்சியாபுரம் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தாயாா் செய்யப்பட்டு, மண் ஆய்வு செய்யப்பட்டு விட்டது.

Advertisement

Advertisement

இதனால் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுபோன்ற வளா்ச்சிப்பணிகளை தொடா்ந்து செயல்படுத்த வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றாா்.

அப்போது ஒன்றியச் செயலாளா் கருப்பசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments