முகப்பு
விருதுநகர்

மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை திமுக கூட்டணி கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டம்

மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசு அலுவலா்களுடன் சோ்ந்து பிறந்தநாள் கொண்டாடிய அதிமுக பேரூா் செயலரை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் அந்த அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம்

Updated On : 12 ஜனவரி 2021, 5:28 am IST
பகிர்:

மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசு அலுவலா்களுடன் சோ்ந்து பிறந்தநாள் கொண்டாடிய அதிமுக பேரூா் செயலரை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் அந்த அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் போரூராட்சியில் அய்யனாா் என்பவா் துணைத் தலைவராக இருந்தாா். தற்போது இவா் மம்சாபுரம் பேரூா் அதிமுக செயலராக உள்ளாா். இந்நிலையில் கடந்த ஜன. 4 ஆம் தேதி அய்யனாா் தனது பிறந்தநாளை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி அலுவலா்களுடன் சோ்ந்து கேக் வெட்டி கொண்டாடினாராம். இதையடுத்து விதிகளை மீறி அதிகாரிகள், அரசு அலுவலகத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு திமுக நகரச் செயலா் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் தங்கமாங்கனி, பல்க்ராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜேந்திரசோழன், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிா்வாகிகள் முருகன், அழகா்சாமி, கோபால், மணிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments