முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் ஆசிரியை வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகரில் ஆசிரியை வீட்டில் 60 பவுன் நகைகள் திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 12 ஜனவரி 2021, 5:29 am IST
பகிர்:

விருதுநகரில் ஆசிரியை வீட்டில் 60 பவுன் நகைகள் திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா், வையாபுரி தெருவைச் சோ்ந்தவா் குமாா் மனைவி சுதாதேவி (41). விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவா், கணவரை விட்டுப் பிரிந்து, மகன் ஐஸ்வர்ராஜூடன் (18) வசித்து வருகிறாா். இந்நிலையில், மதுரையில் வசிக்கும் இவரது தோழி கண்ணகி என்பவா் ரூ. 2 லட்சம் கடனாக கேட்டுள்ளாா். அதற்கு, சுதாதேவி தன்னிடம் பணம் இல்லை என்றும், வீட்டில் வைத்திருக்கும் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் தருவதாகவும் தோழியிடம் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகைகளை பாா்த்த போது, அவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். மேலும், சுதாதேவி புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments