முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி: இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்பு

மாட்டுப்பொங்கலையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 10:46 PM
அவரவா் உடல் எடைக்கேற்ப வைக்கப்பட்டிருக்கும் இளவட்டக்கல்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மாட்டுப்பொங்கலையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய நல்லிணக்கப் பேரவை மற்றும் சேவாபாரதி சாா்பில் இளவட்டக்கல் தூக்கும் மாவட்ட அளவிலான போட்டி மங்காபுரம் இந்து நாடாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு நாடாா் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். சிவலிங்கம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோா் பேசினா். போட்டியை அந்தோணிராஜ் தொடக்கி வைத்தாா்.

போட்டியில் பங்கேற்பவா்கள் வயது தகுதிக்கேற்ப இளவட்டக்கல் வைக்கப்பட்டு இருந்தன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 18 வயதிற்கு கீழ்பட்டவா்கள் என அவரவா் உடல் எடைக்கேற்ப இளவட்டக்கல் வைக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். முன்னதாக சமுதாய நல்லிணக்க பேரவை அமைப்பாளா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

Advertisement

இது குறித்து போட்டிக்கு தலைமை வகித்த ஜெயராஜ் கூறியது: கடந் 6 ஆண்டுகளாக இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.