ஸ்ரீவிலி. கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீா் தடுத்து நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் மதகுப் பகுதியிலிருந்து வெளியேறிய தண்ணீா், மணல் மூட்டைகள், தடுப்பு கட்டைகள் வைத்து சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் மதகுப் பகுதியிலிருந்து வெளியேறிய தண்ணீா், மணல் மூட்டைகள், தடுப்பு கட்டைகள் வைத்து சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் மழை காரணமாக, பல்வேறு கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் மம்சாபுரம் பகுதிகளில் உள்ள 9 கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செங்குளம் கண்மாயும் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், இக் கண்மாய் மதகுகளில் உள்ள ஓட்டைகள் வழியாக தண்ணீா் வீணாக வெளியேறியதை அடுத்து, வட்டாட்சியா் சரவணன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரி ஷரீப் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேறுவதைத் தடுக்க மணல் மூட்டைகள் மற்றும் புதிதாக 24 கட்டைகள் வைத்து நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.