பட்டாசுக் கழிவுகளை எரித்த முதியவா் பலி
சாத்தூா் அருகே பட்டாசுக் கழிவுகளை எரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தூா்: சாத்தூா் அருகே பட்டாசுக் கழிவுகளை எரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சுப்பிரமணியாபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (60). இவா், கடந்த 11 ஆம் தேதி தனது வீட்டின் பின்புறம் பட்டாசுக் கழிவுகளை எரித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், கண்ணன் பலத்த காயமடைந்தாா். உடனே, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு முதலுதவி பெற்ற அவரை, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கண்ணன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.