விருதுநகர்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான இலை வடிவ வடிதட்டு

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்ணாலான இலை வடிவ வடிதட்டு.

Din

சாத்தூா், ஆக. 7: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான இலை வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட வடிதட்டு புதன்கிழமை கண்டறியப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், சுடுமண்ணாலான இலை வடிவ வடிக்கும் தட்டு உடைந்த நிலையில் புதன்கிழமை கண்டறியப்பட்டது. திடப் பொருள்களிலிருந்து திரவங்களைப் பிரித்தெடுக்க இந்தத் தட்டை இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துணை இயக்குநா் பொன் பாஸ்கரன் தெரிவித்தாா்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT