முகப்பு
விருதுநகர்

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

Updated On : 20 ஏப்ரல் 2026, 2:32 am IST
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு - கோப்புப் படம்
பகிர்:

முதல்வா் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு, நாட்டிலேயே வளா்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா் கே.வி.தங்கபாலு கூறினாா்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திமுக கொடுத்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அதனை ஸ்டாலின் சீா் செய்து நாட்டிலேயே வளா்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுபோன்ற வளா்ச்சி இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லை. மீண்டும் தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெரும் என்றாா் தங்கபாலு. அப்போது, வேட்பாளா் ஜி.அசோகன் உடனிருந்தாா்.