வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 4. 5 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள கீழவரகுணராமபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாருக்கு (40) ஜெயக்குமாா் என்பவா் மூலம் கீழராஜ குலராமன் வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்ன மாடசாமி அறிமுகமானாா்.
இவா், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, ரூ. 4.5 லட்சத்தை கொடுத்தாா். இதையடுத்து, சின்னமாடசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தளவாய்புரம் காவல் நிலையத்தில் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement