முகப்பு
விருதுநகர்

லஞ்சம்: ஊராட்சி எழுத்தா் கைது

Updated On : 23 ஜூன் 2026, 3:09 am IST
பகிர்:

ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற செங்கமலப்பட்டி ஊராட்சி மன்ற எழுத்தரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஒன்றியம், செங்கமலப்பட்டி இரண்ாடாம் நிலை ஊராட்சி மன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருபவா் சுப்பிரமணியம் (47). சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ். இவா் தனது மனைவி நதியா பெயரில் இடம் வாங்கி செங்கமலப்பட்டி பகுதியில் வணிக வளாகம் கட்டி வருகிறாா். இந்த வணிக வளாகக் கட்டடத்துக்கு சொத்து வரி புதிதாக செலுத்துவதற்கு சுப்பிரமணியத்திடம் மனு அளித்தாா்.

மனுவை பெற்றுக்கொண்ட சுப்பிரமணியம் தனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் சொத்து வரி ரசீது கொடுப்பேன் எனக் கூறினாா்.

Advertisement

Advertisement

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ், விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் கூறியபடி, திங்கள்கிழமை செங்கமலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரசயானம் தடவிய ரூ.5 ஆயிரத்தை எழுத்தா் சுப்பிரமணியத்திடம் ரமேஷ் கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் பூமிநாதன், காவலா்கள் ஜாஸ்மீன், மும்தாஸ் உள்ளிட்டோா் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments