முகப்பு
விருதுநகர்

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

Updated On : 4 மே 2026, 1:51 am IST
உயிரிழப்பு
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூா் அருகே பெரும்பத்தூா் கிராமம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிரசாத் குமாா் (32). திருவாரூரில் ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் விடுமுறைக்காக ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது ராஜபாளையம் அருகே சோழபுரம் பெரிய பாலத்தை கடந்து சென்றபோது வேகத் தடையில் ஏறி இறங்கியதில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments