முகப்பு
விருதுநகர்

ஆடு திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

Updated On : 12 மே 2026, 1:35 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(45). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேலதொட்டியபட்டி ரெங்கா் கோவில் சாலையில் பண்ணை வைத்து ஆடு, கோழி,

வளா்த்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது பண்ணையிலிருந்து செம்மறி ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனா். இதையறிந்த கிராம மக்கள் அவா்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வ.புதுப்பட்டியை சோ்ந்த செல்வராஜ் மகன் சிவா (18), 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.